டிசம்பர் 9-ம் தேதியன்று அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் விவகாரம் பெரும் பேசுபொருளானது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் பல கோரிக்கை விடுத்தும் விவாதம் நடத்தப்படவில்லை.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-12/466a7828-3bf8-43df-a1f2-764739cc6eb3/Untitled_6.jpg)
இதற்கிடையில் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா-சீனா விவகாரத்தில் பா.ஜ.க சிங்கம் போல பேசுவதாகவும், எலி போல செயல்படுவதாகும் விமர்சித்திருந்தார். இதற்கு பா.ஜ.க தரப்பிலிருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-12/3b85e621-6111-4e2a-a0e0-489fa82fafee/WhatsApp_Image_2022_12_25_at_10_12_39_AM.jpeg)
அதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கார்கே பேசியது குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், கார்கே பேசியது முற்றிலும் தவறு, உண்மை மற்றும் கருத்து இல்லை என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-12/618ffbf7-7f93-46ab-bb6e-a1d5f0e38dfe/WhatsApp_Image_2022_12_25_at_10_12_45_AM.jpeg)
இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில், அதிகபட்சமாக 66 சதவிகிதம் பேர் `கார்கே பேசியது உண்மை' என்பதைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். மற்றபடி 29 சதவிகிதம் பேர் அது `தவறு' என்றும், 5 சதவிகிதம் பேர் `கருத்து இல்லை' என்பதையும் தேர்வு செய்தனர்.
from Latest News
0 கருத்துகள்