Header Ads Widget

மதுரை: `ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை?’ - போலீஸ் தீவிர விசாரணை

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததாக சொல்லப்படும் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மி

மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள ஹோட்டலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குணசீலன் என்ற 26 வயது இளைஞர் பணியாற்றி வந்தார்.

இவர் தங்கியிருந்த இடத்தில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அண்ணா நகர் போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

தற்கொலை

இது குறித்து கவல்துறையினரிடம் விசாரித்தபோது, ``சேலம் மாவட்ட முள்ளக்காடு பகுதியை சேர்ந்த குணசீலன் பிகாம் படித்துள்ளார். அம்மா இறந்த நிலையில் இவரும் சகோதரர்களும் பாட்டி மற்றும் உறவினர் பராமரிப்பில் வளர்ந்துள்ளனர்.

இவர் சகோதரர்கள் மதுரையில் வீடு எடுத்து தங்கி ஹோட்டலில் வேலை பார்த்து வந்தனர். 6 மாதங்களுக்கு முன் குணசீலனும் மதுரையில் சகோதரர்களுடன் தங்கியிருந்து ஹோட்டலில் வேலை செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் தொடர்ச்சியாக ரம்மி விளையாடி வந்துள்ளார். அதில் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பாமலும் தம்பியிடம் ஐம்பதாயிரம் கடன் வாங்கியும் பல லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியில் இழந்து வந்திருக்கிறார் என சொல்லப்படுகிறது.

குணசீலன்

இந்த நிலையில் தங்கியிருந்த வீட்டில் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார் குணசீலன்.

இந்த தற்கொலைக்கு ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தது மட்டும்தான் காரணமா, வேறு ஏதும் காரணமா என்ற ரீதியிலும் விசாரித்து வருகிறோம்" என்றனர்.

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்