சென்னை மணலி, எட்டியப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஜோதி என்கிற ஜோதீஸ்வரன் (23). இவர் மீது பைக் திருட்டு வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் ஜோதி, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் உள்ள குடிசை வீட்டில் நேற்றிரவு தங்கியிருந்தார். அப்போது அவருடன் சிலர் திடீரென நள்ளிரவில் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த கும்பல் ஜோதியை கடற்கரைக்கு இழுத்து வந்து சரமாரியாக அவரின் முகத்திலேயே வெட்டியது். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த திருவொற்றியூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்தனர். சடலமாக கிடந்த ஜோதியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீஸார் இரண்டு பேரிடம் விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸார் கூறுகையில், ``ஜோதி கொலை வழக்கு தொடர்பாக அபினேஷ், சுனில் என இருவரைப் பிடித்து விசாரித்து வருகிறோம். அவர்கள் இருவரும் சம்பவத்தன்று போதையில் கடற்கரை பகுதிக்கு வந்திருக்கிறார்கள். அப்போது மதுபோதையிலிருந்த ஜோதி, `இது எங்க ஏரியா நீங்க யார்?’ என்று கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதனால் ஆத்திரத்தில் ஜோதியை வெட்டியதாக இருவரும் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
இதற்கிடையில் திருவொற்றியூர் குப்பம் கடற்கரை பகுதியில் குடிசை வீடுகளில் சமூகவிரேத கும்பல்கள் மது அருந்திவிட்டு இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதை திருவொற்றியூர் போலீஸார் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
from Latest news

0 கருத்துகள்