Header Ads Widget

மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலில் ட்விஸ்ட்: அணி மாறிவாக்களித்த காங்கிரஸ் MLA-க்கள்; வென்ற பாஜக கூட்டணி

மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாக இருக்கும் 11 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்), சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே) கூட்டணி சார்பாக 9 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். காங்கிரஸ், சிவசேனா(உத்தவ்) கூட்டணி சார்பாக இருவர் போட்டியிட்டனர். இத்தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். அவர்கள் அணி மாறி வாக்களித்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு கட்சியும் தங்களது எம்.எல்.ஏ.க்களை நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்திருந்தனர். நேற்று காலையில் தனியாக அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பஸ்களில் அழைத்து வரப்பட்டனர். காலையில் தொடங்கி மாலை 6 மணி வரை நடந்த இத்தேர்தலில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்பட்டது. இதில் பா.ஜ.க சார்பாக நிறுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பங்கஜா முண்டே உட்பட 5 பேரும் வெற்றி பெற்றனர்.

மிலிந்த் நர்வேகர்

இது தவிர சிவசேனா(ஷிண்டே) சார்பாக நிறுத்தப்பட்ட இரண்டு வேட்பாளர்களும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்கள் இரண்டு பேரும் வெற்றி பெற்றனர். அஜித் பவார் கட்சிக்கு மொத்தம் 42 எம்.எல்.ஏ.க்கள்தான் இருந்தனர். ஆனால் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு 47 வாக்குகள் கிடைத்தது. இதே போன்று சிவசேனா(ஷிண்டே)க்கு 44 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் இருந்தது. ஆனால் அந்த கட்சிக்கு 49 வாக்குகள் கிடைத்தது.

அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து சில எம்.எல்.ஏ.க்கள் அணி மாறி வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. மாறாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்திருந்தனர். காங்கிரஸ் கட்சி சார்பாக நிறுத்தப்பட்டு இருந்த ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றார். இதே போன்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா சார்பாக நிறுத்தப்பட்ட மிலிந்த் நர்வேகர் வெற்றி பெற்றார். ஆனால் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சுயேச்சையாக நின்ற ஜெயந்த் பாட்டீல் தோல்வியை தழுவினார்.

பங்கஜா முண்டே

இத்தேர்தல் மூலம் அஜித் பவார் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை தக்கவைத்துக்கொண்டார். ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணி மாறி வாக்களித்துள்ளனர். அணி மாறி வாக்களித்தது யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது குறித்து கட்சி தலைமைக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் இந்த வெற்றி பா.ஜ.க கூட்டணிக்கு உற்சாகம் கொடுப்பதாக அமைந்திருக்கிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/crf99e88



from India News https://ift.tt/eFMvdaS
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்