Header Ads Widget

RCB : 'இந்த வெற்றிக்காக 18 ஆண்டுகள் காத்திருந்தனர்' - தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது.

RCB vs PBKS
RCB vs PBKS

தினேஷ் கார்த்திக் பேசுகையில், "18 வருடமாக காத்திருந்து இந்த இடத்தை எட்டியிருக்கிறோம். கெய்ல், கோலி என பல வீரர்கள் இந்த அணிக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஒரு அணியாக நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம்.

இன்று கூட பாருங்கள். பிட்ச் பேட்டிங் செய்ய சுலபமாகவெல்லாம் இல்லை.

ஆனாலும் 190 ரன்களை எடுத்தார்கள். முதற்பாதி முடிகையில் பிட்ச் பேட்டிங் செய்ய அவ்வளவு சுலபமாக இல்லை என பேட்டர்கள் சொன்னார்கள். இது இறுதிப்போட்டி. வெற்றி தோல்வி என்பது பிட்ச்சை பொறுத்து இல்லை.

வெற்றி பெற எவ்வளவு ஆர்வத்தோடும் பசியோடும் இருக்கிறோம் என்பதே முக்கியம். பயிற்சியாளர் ஆண்டி ப்ளவருக்கு பாராட்டை சொல்லியே ஆக வேண்டும். அவர்தான் எல்லாவற்றையும் முதலிலிருந்தே திட்டமிட்டார்.

இந்த அணியில் நிறைய சப்போர்ட் ஸ்டாப்களும் 18 ஆண்டுகளாக இந்த வெற்றிக்கு காத்திருந்தார்கள். அவர்களுக்கும் பாராட்டுகள்." எனக் கூறினார்.



from Vikatan Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்