Header Ads Widget

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய TTF வாசன் - காரை போலீஸ் ஸ்டேஷன் எடுத்துச்சென்ற போலீஸார் - நடந்தது என்ன?

கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன் என்பவர் யூ-டியூப் சேனல் நடத்திவருகிறார். தனது சேனலில் அதிவேகத்தில் டூவீலர் பயணம், பைக் சாகசம் என வீடியோக்களைப் பதிவு செய்து வெளியிடுவது இவரின் வழக்கம். போக்குவரத்துக்கு விதிகளுக்கு மீறி பல்வேறு செயல்கள் செய்வதாக இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் உள்ளன. கடந்த மாதம் கடலூரில் ஒரு அலுவலகத்தைத் திறந்து வைக்க வந்த வாசனை காண கூட்டம் கூடியது.

காரை பறிமுதல் செய்த போலீஸார்

போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுமக்களுக்கு இடையூறாகக் கூட்டம் கூட்டியது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் போலீஸாரால் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வாசன் போகும் இடத்தில் எல்லாம் போக்குவரத்து விதிகளைக் காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருப்பது தொடர்கதையாகி வருகிறது. கேஸ் வாங்குவதெல்லாம் துணிக்கடைக்குச் சென்று கட்டைப்பை வாங்குவது போல என்று அவர் சமீபத்தில் சொல்லியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில், நேற்று வடபழனியில் உள்ள திரையரங்குக்குச் சிறப்புக் காட்சி காண டிடிஎஃப் வாசன் வந்திருந்தார். அவரை காணக் கூட்டம் கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திரையரங்க வளாகத்துக்கு வந்த வாசன் திரைப்படம் காணச் சென்றுவிட்டார். அப்போது, அவர் வந்த காருக்கு நம்பர் பிளேட் இல்லாதது குறித்து போக்குவரத்து காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

காரை பறிமுதல் செய்த போலீஸார்

இதனைத் தொடர்ந்து, அந்த கார் பிரவீன் என்பவர் ஓட்டிவந்ததும், கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த அந்த காருக்கு ரெஜிஸ்ட்ரேஷன் செய்தும் நம்பர் பிளேட் இல்லாமல் கார் பயன்படுத்தியதும் தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் சொன்ன விளக்கம் ஏற்கும்படி இல்லை என்று கூறிய போலீஸார், காரை பறிமுதல் காவல்நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் காவல்நிலையத்தில், போலீஸார் அபராதம் விதித்து காரை திருப்பி ஒப்படைத்தனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்