Header Ads Widget

`ரூ.756 கோடி' அக்கவுன்ட் பேலன்ஸ்; வங்கி அனுப்பிய மெசேஜ்... அதிர்ச்சியில் உறைந்த தஞ்சை இளைஞர்!

தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வங்கிக் கணக்கில் இருப்புத்தொகையாக 756 கோடி ரூபாய் இருப்பதாக, வங்கியிலிருந்து மெசேஜ் வந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கணேசன்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள வீரப்புடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தனியார் வங்கி ஒன்றில் அவர் வைத்திருக்கும் அக்கவுன்ட்டிலிருந்து அவருடைய நண்பர் ஒருவருக்கு ரூ.1,000 அனுப்பியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து வங்கியிலிருந்து, கணேசனின் வங்கிக் கணக்கில் இருப்புத்தொகையாக 756 கோடி ரூபாய் இருப்பதாக மெசேஜ் வந்திருக்கிறது. இதைப் பார்த்த அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இந்தச் சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

வங்கித் தரப்பிலிருந்து வந்த மெசேஜ்

இது குறித்து கணேசனிடம் பேசினோம். ``நான், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கோட்டக் மஹேந்திரா தனியார் வங்கியில் அக்கவுன்ட் வைத்திருக்கிறேன். என்னுடைய கணக்கில் சுமார் 15,000 ரூபாய் வைத்திருந்தேன். இந்த நிலையில் நேற்று இரவு ஒரு மணியளவில் என் நண்பர் ஒருவருக்கு 1,000 ரூபாய் அனுப்பினேன். அடுத்த சில நிமிடங்களில் பணம் அனுப்பியது ஃபெயில்டு என மெசேஜ் வந்தது.

பின்னர் எனது அக்கவுன்ட்டுக்கு மீண்டும் ரூ.1,000 கிரெடிட் ஆகிவிட்டது. இதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மற்றொரு மெசேஜ் வந்தது. அதில் என்னுடைய வங்கிக் கணக்கின் லெட்ஜர் பேலன்ஸின் இருப்புத்தொகை 756 கோடி ரூபாய் எனக் காட்டியது. இதைப் பார்த்த எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. விடிந்ததும் மற்றொரு வங்கியில் வேலை செய்யும் எனது நண்பர் ஒருவரிடம் மெசேஜைக் காட்டினேன். அதை செக் செய்த அவர், `உனது அக்கவுன்ட்டில் பணம் இருப்பதாகத்தான் மெசேஜ் வந்திருக்கிறது. உடனே சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்திடம் சென்று தகவல் தெரிவித்துவிடு' என்றார். காலை 10 மணி ஆனதும் கோட்டக் மஹேந்திரா வங்கிக்குச் சென்று மெசேஜைக் காண்பித்து விவரம் கேட்டேன். அதைப் பார்த்த ஊழியர்கள், `நீங்கள் போங்கள், என்னவென்று விசாரித்துவிட்டு உங்களுக்கு போன் செய்கிறோம்' என என்னை திருப்பி அனுப்பிவிட்டனர்" என்றார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த டிரைவர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 9,000 கோடி ரூபாய் விழுந்த சம்பவம், பெரும் பேசுபொருளான நிலையில், தற்போது கணேசனின் வங்கிக் கணக்கில் 756 கோடி ரூபாய் இருப்பதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்