சேலத்தில் இன்று திமுக இளைஞரணி மாநாடு பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக நேற்றே முதல்வர் ஸ்டாலின் சேலம் சென்றார். நேற்று தொடர் சுடர் ஓட்டம் மாநாட்டுக்கு வந்தது. அதனை பெற்று மாநாட்டு திடலில் சுடர் ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின். தொடர்ந்து அங்கு கண்கவர் ட்ரோன் ஷோவும் நடைபெற்றது.

மேலும் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள தொண்டர்களுக்காக சைவம், அசைவம் என பிரமாண்ட உணவு தயாரிப்பு பணியும் நடக்கிறது. இந்நிலையில் ஆளுநர் தமிழிசை திமுகவை விமர்சித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், ``இளைஞரணி மாநாடாம் .... பிரம்மாண்ட முன்னேற்பாடாம்.... முந்தைய நாளே முக்கியமானவரின் மேற்பார்வையாம்...
தம்பிகளை காண தனி விமானம் மூலம் சென்ற முக்கியமானவருக்கு.... அன்று முந்தைய நாளே மழைக்கான முன் அறிவிப்பு வந்தும் மக்களைக் காக்க முன்னேற்பாடு செய்ய செல்வதற்கு தனி விமானம் கிடைக்கவில்லையா? என்று எங்கோ கேட்கிறது ஒரு குரல்....
இன்று உதயமானவரை முன்னிலைப்படுத்த முந்திச் செல்லும் முக்கியமானவர்.... இதயத்தோடு தத்தளித்தவர்களை காக்க முந்திச் செல்லவில்லையே ஏன்? என்று கேட்கிறது அதே குரல்....
இது ஆள்பவர்களுக்கு தகுதியா என்று கேட்டால்? ஆளுநர்களுக்கு தகுதி இல்லை என்பார்கள்.... ஆனால் ஜனநாயகத்தில் ஆளாளுக்கும் கேள்வி கேட்கும் தகுதி இருக்கிறது என்று உரக்கச் சொல்கிறது அதே குரல்...
உரிமை மீட்பு மாநாடாம்? காவிரி உரிமையை தொலைத்தது யார்? கச்சத்தீவை தாரைவார்த்தது யார்? ஜல்லிக்கட்டு உரிமையை இழந்தது யார்? கல்வி உரிமையை பறிகொடுத்தது யார்? நீட் தேர்வு வர ஆரம்பித்தது யார் காலத்தில்? உரிமைகளைத் தொலைத்தவர்களே இன்று உரிமை மீட்பு மாநாடு நடத்துகிறார்களாம்..
வாரிசுகளுக்கே அரியணையா? இவர்களிடமிருந்து நம் உரிமையை மீட்டெடுப்பது யார்?
(தி)க்கு (மு)க்காடும் (க)ண்மணிகள்....” என குறிப்பிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/47zomWY
from India News https://ift.tt/CGziPsn
via IFTTT

0 கருத்துகள்